தஞ்சாவூர், மே 31- இந்திய சுதந்திரத்தின் வைர விழா கொண் டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மத்திய கலால் அலுவலகம், மத்திய மறைமுக வரிகள் வாரியம் சார்பாக தஞ்சாவூரில் விழிப்புணர்வு நடைப்பயணம் செவ்வாய்க்கிழமை நடை பெற்றது. இந்த நடைப்பயணம் சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மத்திய கலால் அலுவல கம் முதல் பெரிய கோயில் வரை நடைபெற் றது. உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற, இந்த நடைப்பயணத்தை மருது பாண்டியர் கல்வி நிறுவனத் தலைவர் கே. மருதுபாண்டியன் தொடங்கி வைத்தார். இதில் ஜிஎஸ்டி வரி செலுத்துவோர், வர்த்த கர்கள், பட்டயக் கணக்காளர்கள், வரி ஆலோ சகர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்டோர் நடைப்பயணத்தில் பங்கேற்றனர். பின்னர் நடைபெற்ற நிகழ்வில், ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறை உதவி ஆணையர் வி.மீனாட்சிசுந்தரம், கண்காணிப் பாளர் மற்றும் அலுவலர்கள் புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் தீங்குகள் குறித்து பேசினர்.