districts

உடல் நலக்குறைவால் இறந்த தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு சக காவலர்கள் நிதியுதவி வழங்கல்

தஞ்சாவூர், ஜூன் 6 - உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த தலை மைக் காவலரின் குடும்பத் துக்கு சக காவலர்கள் நிதி யுதவி வழங்கினர். தஞ்சாவூர், ஞானம் நகர்,  6 ஆவது குறுக்குத் தெரு வைச் சேர்ந்தவர் முருகேஷ் (43). இவர் தஞ்சாவூர் ஆயுதப் படையில் தலைமைக் காவல ராகப் பணியாற்றி வந்த நிலை யில், கடந்த மார்ச் 22 ஆம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இவருக்கு மனைவி சரண்யா மற்றும் 3 ஆம் வகுப்பு படித்து வரும் மகன் மகந்த் (7) உள்ளனர்.   உயிரிழந்த முருகேஷ் 2006 ஆம் ஆண்டு 2 ஆம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். அப்போது அவ ருடன் ஒன்றாக பயிற்சியில் சேர்ந்த 2 ஆயிரம் பேர் தமிழ கம் முழுவதும் காவல்துறை யில் பணியாற்றி வருகின்ற னர். இவர்கள் வாட்ஸ்-அப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் குழுவாக நண்பர்க ளாக உள்ளனர். இதன் மூலம் ஒவ்வொரு குடும்ப விழாக் கள்-நிகழ்வுகளில் பங்கேற்று வந்துள்ளனர்.  இவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கு 3 பேரும்,  மாநில அளவில் ஒருங்கிணைப் பாளர்களும் சேர்ந்து, 2006 ஆம் ஆண்டு காலக் கட்டத் தில் பணியில் சேர்ந்த காவ லர்கள் எவரேனும், விபத் திலோ அல்லது உடல்நலக் குறைவாலோ இறந்தால் அவர்களுக்கு உதவி செய்து  வருகிறார்கள்.

அதன்படி இது வரை 9 பேரின் குடும்பத் திற்கு உதவி செய்துள்ளனர். இந்நிலையில், முரு கேஷ் உயிரிழந்ததையடுத்து அவருடைய குடும்பத்துக் கும் உதவும் வகையில் தமிழ கம் முழுவதும் 2006 ஆம்  ஆண்டு பயிற்சியில் சேர்ந்த  காவலர்கள், ரூ.15,82,636 நிதி  திரட்டினர். இதையடுத்து ஞாயிறன்று தஞ்சை வந்த  காவல்துறை வாட்ஸ்அப்  குழு ஒருங்கிணைப்பாளர் கள் தனசேகரபாண்டியன், கோபால், சரிதா, அமிர்த ராஜ் மற்றும் காவலர்கள்,  முருகேஷின் உருவப் படத்துக்கு மாலை அணி வித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.  தொடர்ந்து, முருகேஷ் மகனின் எதிர்காலத்தை கருதி அவருடைய பெயரில் ரூ.13 லட்சத்தை வங்கி வைப்பு நிதியாக போட்டு, அதற்கான பத்திரத்தையும், முருகேஷின் தாயார் சந்திரா வின் வங்கி கணக்கில் ஒரு  லட்சம் ரூபாயும், முருகே ஷின் மனைவி வங்கி கணக் கில் ரூ.1,82,636 ரூபாயும் செலுத்தி அதற்கான ஆவ ணங்களை ஞாயிற்றுக் கிழமை வழங்கினர். நிதி உத வியைப் பெற்றுக் கொண்ட முருகேஷின் குடும்பத்தினர், காவல்துறை நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.