ஒரத்தநாடு, ஜன.6- தஞ்சை மாவட்டம் ஒரத்த நாடு அருகே உள்ள குல மங்கலம் கிராமத்தை சேர்ந்த வர் ஊராட்சி மன்ற தலை வர் வேலாயுதம். இவரது மகன் ஜெயராஜ் (38). இவ ருக்கு திருமணமாகி கண்ணகி என்ற மனைவியும், 4 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், ஜெய ராஜ் சவூதி அரேபியா சென்று கட்டிட வேலை பார்த்து வந்தார். கடந்த அக்டோ பர் 16-ஆம் தேதி கண்ணகியை தொடர்பு கொண்ட இந்திய தூதரக அதிகாரிகள், உங்களது கண வர் ஜெயராஜ் இறந்து விட்ட தாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தஞ்சாவூர் ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவரிடம், தனது கண வரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணகி மனு அளித்தார். இதனை தொடர்ந்து இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் தகவல் அளித்த ஜெயராஜ் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்தார். இந்நிலையில் ஜெயராஜ் உடல், சவூதி அரேபியாவில் இருந்து விமா னம் மூலம் சென்னை வந்தது. பின்னர் அங்கிருந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான ஒரத்தநாடு அருகே உள்ள குலமங்கலத்திற்கு கொண்டு வரப்பட்டு, தகனம் செய்யப்பட்டது.