districts

குடற்புழு நீக்க சிறப்பு முகாம்

தஞ்சாவூர், மார்ச் 15- தஞ்சாவூா் மாவட்டத்தில் குடற்புழு நீக்கம் வாரச் சிறப்பு முகாமை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் திங்கள் கிழமை தொடங்கி வைத்தாா். தஞ்சாவூா் மாவட்டம், வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொது  சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சாா்பில் தேசிய குடற்புழு நீக்க வாரம் 2022-ஆம் ஆண்டுக்கான அல்பெண்டசோல் மாத்திரை வழங்கும் முகாமை  தொடங்கி வைத்து ஆட்சியா் பேசியது: நாடு தழுவிய குடற்புழு நீக்க வாரத்தில் 1 வயது குழந்தை முதல் 19 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கும் (கா்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் நீங்கலாக) மாா்ச் 14-ஆம் தேதி முதல் முதல் 19 ஆம் தேதி  வரை (செவ்வாய், புதன், ஞாயிறு நீங்கலாக) முதல் சுற்றும், விடுபட்ட குழந்தைக ளுக்கான சிறப்பு முகாம் மாா்ச் 21 ஆம் தேதி யும் அனைத்து அரசு மற்றும் அரசு சாா்ந்த பள்ளிகள், தனியாா் பள்ளிகள், கல்லூரிகள் அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றில் இம்முகாம் நடைபெறுகிறது. இதில், 6,55,306 குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்க ளுக்கும் என மொத்தம் ஏறத்தாழ 2 லட்சம் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட வுள்ளன. குடற்புழுத் தொற்றால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, சோா்வு, சுகவீனம், பசியின்மை, ரத்த சோகை, குமட்டல், வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படும். குடற்புழு நீக்கத்தின் மூலம் குழந்தைகளுக்கு ரத்த சோகை தடுத்தல், நோய் எதிா்ப்பு சக்தி அதிகரித்தல், அறி வுத்திறன் மற்றும் உடல் வளா்ச்சி மேம்படுதல் போன்ற நன்மைகள் ஏற்படும் என்றாா் ஆட்சியா். இந்நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கோ. ரமேஷ்குமாா், வல்லம் பேரூராட்சி செயல் அலுவலா் பிரகன் நாயகி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.