districts

விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு இழப்பு வழங்க கோரிக்கை

தஞ்சாவூர், ஏப்.22 -  விடுபட்ட விவசாயிகளுக்கு, பயிர்க் காப்பீடு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  தஞ்சையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன் தஞ்சை கோட்டாட்சியரிடம் அளித்த  கோரிக்கை மனுவில், கடந்த ஆண்டு எதிர்பா ராத விதமாக கன மழையினால் பாதிப்ப டைந்த பயிர்களுக்கு, தமிழக அரசால் அறி விக்கப்பட்ட நிவாரணம் இன்னும் பலருக்கு கிடைக்காமல் உள்ளது. இது குறித்து பல முறை முறையிட்டும் இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்ட பணம் வழங்கப்படாமல், சில நபர்களுக்கு மட்டும் தாமதப் படுத்தப்பட்டு வருகிறது.  பூதலூர் வட்டத்தில் இராயமுண்டான் பட்டி கிராமத்தில் பலருக்கும் நிவாரணம் வராமல்  உள்ளது. உதாரணமாக லீலாவதி ரூ.20 ஆயி ரம், சசிபாரதி ரூ.14 ஆயிரம் ஒதுக்கப்பட்டு அரசு  ஆணை வெளியிடப்பட்டும், இதுவரை பணம்  கிடைக்காமல் உள்ளது. இன்னும் பலருக்கும்  இதே சூழ்நிலை உள்ளது. எனவே, ஒதுக்கீடு  செய்யப்பட்ட பயிர் காப்பீடு இழப்பீடு பணத்தை  மேலும் பல மாதங்கள் தாமதப்படுத்தாமல் உடனடியாக கிடைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.