பாபநாசம், அக்.28- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து கும்பகோணம் வரு வாய் கோட்டாட்சியர் லதா தலைமை யில் பாபநாசம் தாலுகா அலுவலகத தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தாசில்தார் பூங்கொடி, பாப நாசம் வேளாண் உதவி இயக்குநர் சுஜாதா, அம்மாபேட்டை வேளாண் உதவி இயக்குநர் மோகன், மார்க் சிஸ்ட் கட்சி மாவட்டக் குழு காதர் ஹீசைன், பாபநாசம் ஒன்றியச் செய லாளர் முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில், அரையபுரம் குப்பைமேடு பகுதியில் வழங்கப்பட்ட குடிமனைப் பட்டாவை ரத்துச் செய் திட நடவடிக்கை எடுக்கப்படும். பண்டாரவாடை மற்றும் அரையபுரம் வடிகால் நீர்வளத் துறையின் சார்பில் வாய்க்கால் விரைவில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும், விவசாயி களுக்கு முறையாக நிவாரணம் வழங்கிடவும், இனி வரும் காலங்களில் நிவாரணம் முறைப்படி வழங்க நட வடிக்கை எடுக்கப்படும் என வேளாண் மைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற விழையும் விவசாயி ஏற்க னவே வரவு செலவு செய்து வரும் சங்கத்தில் தான் பெற்றுள்ள கடன் தொகைக்கு தேவையான பங்குத் தொகைக்கும் அதிகமாக செலுத்தி யுள்ள பங்குத் தொகையை சங்க துணை விதிகளில் தெரிவித்துள்ள வாறு திரும்பப் பெற்று புதிய சங்கத்தில் செலுத்தி பயிர்க் கடன் பெற்றுக் கொள் ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.