districts

img

அதிராம்பட்டினத்தில் சிபிஎம் மக்கள் சந்திப்பு பிரச்சாரம்

தஞ்சாவூர், செப்.11- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பட்டு கோட்டை ஒன்றியக் குழு  சார்பில், மக்கள் சந்திப்பு  தெருமுனை பிரச்சாரக் கூட்டம் சனிக்கிழமையன்று நடைபெற்றது.  பிரச்சாரக்கூட்டத்திற்கு கட்சியின் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர்  எஸ். கந்தசாமி தலைமை வகித் தார்.  தஞ்சை மாவட்டச் செய லாளர் சின்னை. பாண்டி யன் கலந்து கொண்டு பேசு கையில், “மோடி தலைமை யிலான பாஜக ஆட்சியில் மக்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகின்றனர். விலைவாசி கட்டுக்கடங்காமல் சென்று விட்டது. எரிவாயு உருளை,  பெட்ரோல், டீசல் விலை உச்  சத்தில் உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல ஆயி ரம் கோடி ரூபாயை வாராக்  கடன் என்ற பெயரில் தள்ளு படி செய்யும் மோடி அரசு, சிறு, குறு விவசாயிகள் பெற்ற கடனுக்காக கழுத்தில் துண்  டைப் போட்டு வசூல் செய்கி றது. இத்தகைய ஒன்றிய அரசை  ஆட்சியிலிருந்து அகற்ற  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து போராடி வரு கிறது. மோடி ஆட்சிக்கு பொதுமக்கள் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செயல்  பட வேண்டும்” என்று கேட் டுக்கொண்டார்.  இக்கூட்டத்தில் ஒன்றி யக் குழு உறுப்பினர்கள் உள்  பட பலர் கலந்து கொண்ட னர்.

;