districts

சிபிஎம், மாதர் சங்கம் போராட்ட அறிவிப்பு தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்படாது: அதிகாரிகள் உறுதி

தஞ்சாவூர், ஜூன் 8-  தஞ்சாவூர் ஒன்றியம்  ராமநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வனதுர்கா நகர்,  சரஸ்வதி நகர், பொதிகை நகர், லட்சுமி நகர், ஏ.கே.எம் காலனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கருவுற்ற தாய் மார்கள், முதியவர்கள், சிறு வர்கள் பொதுமக்கள் என 2  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.  இந்நிலையில் இப்பகுதி யில் உள்ள ஒரு வீட்டின் மேல்  மாடியில் தனியார் தொலை தொடர்பு நிறுவனம் செல் போன் டவர் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரு கிறது. இப்பகுதியில் செல் போன் டவர் அமைக்கப்பட் டால், உயர் கதிர்வீச்சு காரண மாக, கருவுற்ற தாய்மார்கள் பாதிக்கும் அபாயம், அதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதால் செல் போன் டவர் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர்.  ஆனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், தனியார் நிறு வனம் செல்போன் டவர் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. இதனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம், வன துர்கா நகர் பகுதி மக்கள் தஞ்சை வட்டாட்சியர் அலு வலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.  இதையடுத்து, தஞ்சை வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் காவல்துறை ஆய்வா ளர் சந்திரா, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் பொது மக்களிடம் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதில், தனியார் தொலைத்தொடர்பு நிறுவன அதிகாரிகள் மற்றும் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி. செந்தில்குமார், ஒன்றியச்  செயலாளர் கே.அபி மன்னன், ஒன்றியக்குழு உறுப் பினர்கள், மாதர் சங்க ஒன்றி யத் தலைவர் சரிதா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.  இதில், பொதுமக்க ளுக்கு பாதிப்பை ஏற்படுத் தும் என எதிர்ப்பு தெரிவிப்ப தால், தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்க அனுமதி  வழங்கப்படாது. தொலைத் தொடர்பு கோபுரம் அமைப்ப தற்காக கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ள தளவாட  பொருட்கள் அங்கிருந்து அகற்றப்படும் என அதி காரிகள் உறுதியளித்தனர்.  இதையடுத்து போ ராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் தொலைத் தொடர்பு நிறுவன ஊழி யர்கள், தாங்கள் கொண்டு வந்து வைத்திருந்த சாதனங் களை அங்கிருந்து அகற்றும்  பணியில் ஈடுபட்டு வருகின்ற னர். வரும் வெள்ளிக்கிழமைக் குள் முழுவதும் அகற்றப் படும் என உறுதியளித்தனர்.  சிபிஎம், மாதர் சங்க போராட்டத்தின் காரணமாக பொதுமக்களுக்கு பாதிப்பை  ஏற்படுத்தும் தொலைத் தொடர்பு கோபுரம் அமைக் கும் முயற்சி தடுத்து நிறுத்தப் பட்டதால், இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.