தஞ்சாவூர், ஏப்.11 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா, ஆதனூர் கிராமத்தை சேர்ந்த, மெசியா என்ற விவசாயியின் வீடு எரிந்து சேதமானது. ஆதனூரில், வசித்து வரும் விவசாயி மெசியா. இவர் மனைவி மீருன்சா மேரி மற்றும் தனது இரு பெண் குழந்தைகளுடன் வேளாங்கண்ணிக்கு சென்றிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மழை பெய்து கொண்டி ருக்கையில், மின்கசிவு காரணமாக கூரை வீடு தீ பற்றி எரிந்தது. வீட்டிலிருந்த ஐசக் நியூட்டன் மற்றும் கிராமத்தார்கள் துணையோடு தீயை அணைத்து, மீதமான பொருட்களை வெளியில் எடுத்து விட்டனர். ஆனாலும், வீட்டின் பாதி தீயில் எ ரிந்து சேதம் ஆகிவிட்டது. வீட்டிலிருந்த பிரிட்ஜ், மிக்சி முதலிய எலக்ட்ரிக் பொருள்கள், கேஸ் அடுப்பு, மற்றும் துணிகளும் தீயில் கருகி சேதமாகின. இதனையடுத்து, தீயில் சேதமான வீட்டை கிராம உதவி யாளர் கண்ணன் மற்றும் சரோஜா, பேரூராட்சி கவுன்சிலர் காரல் மார்க்ஸ், பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எம்.இந்துமதி, சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பி னர் சிதம்பரம், ஆதனூர் கிளைச் செயலாளர் முனைவர் வேத கரம்சந்த் காந்தி, ஜாக்குலின் உள்ளிட்டோர் பார்வை யிட்டு ஆறுதல் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.