பாபநாசம், அக்.30- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த மாநகரங்களுள் ஒன்றாகும். இங்கு மகாமக குள கரை உள்ளிட்ட தெருக்களில் போக்கு வரத்திற்கு இடையூறாக மாடுகள் சாலையை சுற்றித் திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கு கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.