districts

img

நாட்டு நலப்பணித் திட்ட திருநாள்:  பொதுமக்களுக்கு துணிப்பை வழங்கல்

தஞ்சாவூர், செப்.29- பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் கல்லூரி நிறுவனர் மற்றும் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர்  எஸ்.டி.சோமசுந்தரம் நூற்றாண்டு விழா மற்றும் நாட்டு நலப்பணி திட்ட திருநாள் கொண்டாடப்பட்டது.  இந்நிகழ்வில், காலை கல்லூரி வளாகத்தில் மரக்கன்று கள் நடப்பட்டன. மாலை 3.30 மணியளவில் மாணவர்கள் பட்டுக்கோட்டை நகரில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நடத்தி னர்.  இப்பேரணியை கல்லூரி முதல்வர் பி.சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில், மாண வர்கள் பிளாஸ்டிக் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்ற னர். இப்பேரணியை, பட்டுக்கோட்டை அண்ணா சிலை  பகுதியில் தொடங்கி, மார்க்கெட் வழியாக மணிக்கூண்டு  பகுதியில் நிறைவு பெற்றது. வழி நெடுகிலும் பொதுமக்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் பைகளை பெற்றுக் கொண்டு, புதிய துணிப்பைகள் வழங்கப்பட்டன. 

;