districts

பருத்தி மறைமுக ஏலம்: விவசாயிகளுக்கு அழைப்பு

கும்பகோணம், ஜூன் 5- வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கட்டுப்பாட்டில் செயல் படும் தஞ்சாவூர் விற்பனை குழுவிற்கு உட்பட்ட கும்பகோணம், திருப்பனந்தாள் மற்றும் பாபநாசம் ஆகிய ஒழுங்குமுறை விற் பனைக் கூடங்களின் மூலம் நடப்பு 2022  ஆம் ஆண்டு பருத்தி மறைமுக ஏலம் கடந்த  ஜூன் 1 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த ஏலத்தின் போது பருத்தி கொள் முதல் செய்ய இந்திய பருத்தி கழகத்தினர்,  உள்ளூர் மற்றும் பிற மாவட்ட பருத்தி வணி கர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். எனவே பருத்தி விவசாயிகள் தங்கள் பகுதிக்கு  அருகில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு சென்று கொள் முதல் நடைபெறும் நாட்களில் மறைமுக  ஏலத்தில் கலந்து கொண்டு விற்பனை செய்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. இம்முறை ஏலமானது பிரதி வாரம் புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முறையே கும்பகோணம், திருப்பனந்தாள் மற்றும் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் முற்பகல் 10 மணிக்கு நடைபெ றும். விவசாயிகள் அதிகபட்ச விலை கிடைக்க  ஏதுவாக தங்கள் பருத்தியினை நன்கு நிழ லில் உலரவைத்து தூசு போன்றவற்றை நீக்கி  தரமான பருத்தியை விற்பனைக்கு கொண்டு  வந்து நல்ல விலை பெற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு தங்கள் அருகி லுள்ள கும்பகோணம் 0435-2481285 பாபநாசம் 04374-222423 மற்றும் திருப்பனந்தாள் 0435-2456447 ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூட பொறுப்பாளர்களை அணுகி உரிய தக வல்களை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட  ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரி வித்துள்ளார்.