பாபநாசம் ஆக.21 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது. ஏலத்திற்கு ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தாட்சா யிணி, மேற்பார்வையாளர் அன்பழகன் முன்னிலை வகித்தனர். பருத்தி ஏலத் தில் பாபநாசம், இதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 1020 விவசாயிகள் பங்கேற்றனர். ஏலத்தில் 1300.69 குவிண்டால் பருத்தி கொண்டு வரப் பெற்றது. கும்பகோணம், பண்ருட்டி, திருப்பூர், செம்பனார் கோவில் பகுதிகளைச் சேர்ந்த 7 வணிகர்கள் மறை முக ஏலத்தில் கலந்து கொண்டனர்.