districts

img

குடிசையில் தீ விபத்து  மின்கசிவு காரணமா?

 தஞ்சாவூர், ஏப்.12- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் சர பேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி, சின்னமனை கிரா மத்தைச் சார்ந்தவர் சுப் பையா மீனவக் கூலி தொழிலாளி (65). இவர் மனநலன் பாதிக்கப்பட்ட தனது மகன் சுரேஷ்குமார் (35), மருமகள் வளர்மதி (30) ஆகியோருடன் வசித்து வருகிறார்.  இந்நிலையில், ஞாயிறன்று நள்ளிரவு இவரது கூரை  வீடு தீப்பிடித்து எரிந்தது. கூரை வீட்டுக்கு அருகிலேயே உயர் அழுத்த மின்கம்பம் இருப்பதால், அதில் இருந்து  மின்கசிவு ஏற்பட்டு கூரை வீடு தீப்பற்றியதாக கூறப்படு கிறது.  இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் வெளியில் ஓடி  வந்து விட்டனர். சுப்பையனின் மருமகள் வளர்மதி தொட்டி லில் கிடந்த தனது 2 1/2 வயது குழந்தையை காப்பாற்ற  சென்றபோது அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது.  இதையடுத்து அருகில் உள்ள அழகிய நாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகின.
கான்கிரீட் வீடு கட்டித் தர கோரிக்கை
கூலித்தொழிலாளியான சுப்பையா அன்றாட வேலைக்கு சென்றால் தான் தனது குடும்பத்தை காப்பாற்ற 
முடியும் என்ற நிலையில், அவருக்கு அரசு கான்கிரீட் வீடு கட்டித் தர வேண்டும் என சமூக ஆர்வலர் மல்லிப் பட்டினம் கமால் பாட்ஷா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.