தஞ்சாவூர், மார்ச் 30 - இராமநாதபுரம் மாவட் டம் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்தி ரனை சாதி பெயரை சொல்லி திட்டி, இழிவுபடுத்திய அமைச்சர் ராஜகண்ணப்ப னைக் கண்டித்தும், அமைச் சர் மீது தமிழக அரசு நடவ டிக்கை எடுத்திட வலியுறுத்தி யும், மாநில மையத்தின் முடி வின்படி தஞ்சை மாவட்டத் தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், உணவு இடைவேளை நேரத் தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராவூரணியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பி னரும், துணை வட்டார வளர்ச்சி அலுவலருமான ஸ்ரீ மகேஷ் தலைமை வகித்து பேசினார். வட்டத் தலைவர் கி.சுரேஷ் கண்டன உரை யாற்றினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலிய பெருமாள் நன்றி கூறினார். பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத் தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட் டச் செயலாளரும், பட்டுக் கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலருமான கை.கோவிந் தராசன் தலைமை வகித் தார். ஊராட்சி செயலாளர் ஜெயந்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பட்டுக் கோட்டை வட்டத் தலைவர் அறிவழகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.