districts

img

ஒரத்தநாடு தோழர் எஸ்.முருகன் காலமானார்

தஞ்சாவூர், ஜூன் 30- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.முருகன் (52), உடல் நலக்குறைவால் காலமானார்.  அவருக்கு மனைவி லதா, கார்த்திகா, வெண்மணி என்ற இரு மகள்கள் உள்ளனர். மறைந்த தோழர் எஸ்.முருகன் இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவற்றிலும், கட்சியின் ஒரத்தநாடு நகரச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.  கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தோழர் முருகன் காலமானார். அவருடைய இறுதி நிகழ்ச்சி ஒரத்தநாடு திருவள்ளு வர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டி யன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், என்.சுரேஷ் குமார், முன்னாள் ஒன்றியச் செயலாளர் கோபு, ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜ், நிர்வாகிகள் கு.பாஸ்கர், துரைராஜ், வெங்கடேசன், வசந்தகுமார் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.