districts

img

இடித்த வீடுகளுக்கு இழப்பீடும், புதிய வீடும் கட்டித் தரக் கோரி ஆட்சியரிடம் மனு

தஞ்சாவூர், ஜூலை 18 -  திருவையாறு பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய சிறுபான்மையினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச்  செயற்குழு உறுப்பினர்கள் கே.பக்கிரி சாமி, என்.வி.கண்ணன், சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் ஏ.ராஜா ஆகியோர் தலைமையில் திங்கள்கிழமை நடை பெற்ற மனுநீதி நாள் முகாமில், தஞ்சா வூர் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.  அதில், தஞ்சாவூர் மாவட்டம், திரு வையாறு வட்டம், கண்டியூர் கிராமம் கபால புஷ்கரணி தெரு உள்ளிட்ட பல  இடங்களில் ஏழை, எளிய மக்கள் கடந்த  60, 70 ஆண்டுகளுக்கு மேலாக குடி யிருந்து வருகின்றனர். அரசு புறம் போக்கு வகைப்பாட்டில் உள்ள வீடு களை அப்புறப்படுத்தச் சொல்லி, இந்து  அறநிலையத்துறை அலுவலர்களும், திருவையாறு வட்டாட்சியர் அலுவ லர்களும் முயற்சி செய்து வருகின்றனர்.  இதுகுறித்து நோட்டீஸ் அளித்துள் ளதோடு, 10 நாட்களுக்கு முன்பு இரண்டு  வீடுகளை புல்டோசர்களைக் கொண்டு  இடித்து தரைமட்டம் ஆக்கிவிட்டனர். இந்த இடம் கிராம கணக்கில் சர்க்கார் புறம்போக்கு என உள்ளது. ஆனால் நீண்ட காலமாக அதாவது 1965 முதல் இவ்விடங்களில் உள்ள வீடுகளுக்கு அறநிலையத் துறையினர் வாடகை வசூலித்து வந்துள்ளனர்.  மேலும், வீடுகளை இடித்து விட்டு  வெளியேறுங்கள் என தினமும் அற நிலையத்துறையினர் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனர். இது தொடர் பாக அலுவலர்களை சந்தித்து கேட்ட தற்கு தவறுதலாக வசூலிக்கப்பட்டது. இனி அவ்வாறு வசூலிக்க மாட்டோம் என கோயில் செயல் அலுவலர் தெரி வித்துள்ளார்.

 ஆட்சேபணை இல்லாமல் அரசு புறம்போக்கில் பட்டா வழங்க வேண்டும். இந்த இடம் பொதுப் பணி களுக்கோ அல்லது யாருக்குமோ இடை யூறாக இல்லை. எதற்காக இந்த  இடத்தை காலி செய்ய வேண்டும்  எனவும் அதிகாரிகள் தெரிவிக்க வில்லை. அரசுக்கு தேவைப்படாத யாருக்கும் இடையூறு இல்லாத இவ் விடங்களுக்கான பட்டாவை குடியிருக் கும் மக்களுக்கே வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.  இழந்த வீடுகளுக்கு இழப்பீடு மற்றும் புதிய வீடு கட்டிக் கொடுக்கப் பட வேண்டும். பொது நியாயங்களின் படி வீடுகளை அதிகாரிகள் இடித் திருக்கக் கூடாது. ஆகவே அதற்குரிய இழப்பீடும், அவ்விடத்தில் அரசு சார்பில் வீடும் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும்.  இந்த கபால புஷ்கரணி பகுதியில் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் மக்கள் பெரும்பாலும் இஸ்லாமிய சிறுபான் மையினராக உள்ளனர். அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கை பாரபட்சமாக இருக்குமோ என அச்சப்பட வேண்டி உள்ளது. எனவே, விரைந்து நியாய மான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.  அப்போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி கதிரவன், சிபிஎம் கிளைச் செயலாளர் ராமமூர்த்தி மற்றும் கண்டியூர் கிராமம் கபால புஷ்கரணி தெருவைச் சேர்ந்த பெண்கள் பலர் உடனிருந்தனர்.