கும்பகோணம் நவ.19 - தஞ்சாவூர் மாவட்ட அளவிலான 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கும்ப கோணம் நகராட்சி கலையரங்கத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர் தலைமையில் நடைபெற்றது. தஞ்சாவூர் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் சி.தமிழ்நங்கை வரவேற்றார். இணைப் பதிவாளர்கள் வெ. பெரியசாமி, ஜெ.பழனீஸ்வரி திட்ட விளக்கவு ரையாற்றினார். சிறந்த கூட்டுறவு நிறுவ னங்களுக்கு பாராட்டும் நினைவுப் பரிசும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், 134 மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்பட 1751 பயனாளிகளுக்கு ரூ.4.11 கோடி மதிப்பி லான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவி களை அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், மாவட்ட குழு தலைவர் எஸ்.கே. முத்துசெல்வன், கும்பகோணம் மேயர் க.சரவணன், துணை மேயர் சு.ப.தமிழழகன், தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி ஆகியோர் வழங்கி னர்.