districts

img

செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

கும்பகோணம், ஜூலை 23 - சர்வதேச செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சனிக் கிழமை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடை பெற்றது. பேரணியை கோட்டாட்சியர் லதா தலை மையில், எம்எல்ஏ அன்பழகன் கொடிய சைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை யம் சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் சர்வதேச ஒலிம்பியாட் குறித்த விளம்பர சட்டை மற்றும் தொப்பி அணிந்து பங்கேற்றனர். இந்த பேரணி கும்பகோணம் மகாமக குளக்கரையிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்களிடையே சதுரங்க போட்டிகள் நடைபெற்று வரு கின்றன.  இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், 44 ஆவது சது ரங்க ஒலிம்பியாட் போட்டிகள் 28.7.2022 முதல்  10.8.2022 வரை மாமல்லபுரத்தில் நடைபெற வுள்ளன. இப்போட்டிகளை பொதுமக்களி டையே கொண்டு செல்லும் வகையில்  பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டு வருகின்றன.  இப்போட்டிகளில் புதுக்கோட்டை மாவட் டத்தை சேர்ந்த 2,045-க்கும் மேற்பட்ட மாணவ,  மாணவியர்கள் பங்கேற்று, சதுரங்க விளை யாட்டு விளையாடினர். வட்டார அளவிலான இப்போட்டிகளில் வெற்றி பெற்ற 117 மாண வர்கள், 117 மாணவியர்கள் என மொத்தம் 234  மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப் பட்டு 25.7.2022 அன்று நடைபெறும் மாவட்ட அள விலான போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.