தஞ்சாவூர், ஜூன் 18- மின் கணக்கீட்டு முறை யில் மாற்றம் செய்யப்பட்டுள் ளது என பட்டுக்கோட்டை உதவி மின்பொறியாளர் (பிரிவு-2) ராகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில், “பட்டுக்கோட்டை நகர் பிரிவு 2-ல் காளியம்மன் கோவில் தெரு, மின் பகிர்மா னம் காளியம்மன் கோவில் தெரு, தச்சர் தெரு ஆகிய பகுதிகளில் ஒற்றைப்படை மாதங்களான 1,3,5,7,9,11 ஆகிய மாதங்களில் இது வரை மின் கணக்கீட்டு பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், மின் கணக் கீட்டாளர்களின் பணிச்சுமை காரணமாக, இனி வரும் காலங்களில் இரட்டைப்படை மாதங்களான 2, 4, 6, 8, 10, 12 ஆகிய மாதங்களில் மின் கணக் கீடு செய்யப்படும். மேலும் ஜூலை 2022 மாதக் கணக்கீடு செய்வதற்கு பதிலாக, இந்த ஜூன் 2022 மாத இறுதி வாரத்தில் மின் கணக்கீடு செய்யப்படும். மின் நுகர் வோர்கள் அனைவரும் இந்த அறிவிப்பை ஏற்று ஒத்து ழைப்பு அளித்து, உரிய காலத் திற்குள் மின் கட்டணத்தை செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.