districts

img

காவிரி மேலாண்மை ஆணைய குழு கல்லணையில் ஆய்வு விவசாயிகள் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு

தஞ்சாவூர், ஜூன் 18 - கல்லணையில் வெள்ளிக்கிழமை மாலை, காவிரி மேலாண்மை ஆணை யத்தின் தலைவர் மற்றும் உறுப்பி னர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, ஆணையம் ஒருதலைபட்சமாக செயல் படுவதாக கூறி, ஆணையத்தை கண்டித்து கருப்புக் கொடியுடன் விவசா யிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  காவிரி மேலாண்மை ஆணையத் தின் தலைவர் ஹல்தர், ஆணையத்தின் உறுப்பினர் நவீன்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் வியாழக்கிழமை தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் காவிரி நீர் குறித்து ஆய்வு செய்தனர். பின்னர், வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணையில் ஆய்வு செய்து விட்டு, மாலையில், தஞ்சாவூர் மாவட்ட எல்லையான கல்லணைக்கு வந்தனர். அங்கு, கல்லணைக் கால்வாய்  ஆற்றின் தலைப்பு பகுதி உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, தமிழக நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர், கல்லணை யில் இருந்து பிரியும் ஆறுகள், பயன் படுத்தப்படும் தண்ணீரின் அளவு போன்றவை குறித்து விளக்கம் அளித் தார். பிறகு ஹல்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “காவிரி ஆறு பகுதியில் உள்ள அணைகள் தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம். ஜூன்  23 ஆம் தேதி ஆணையத்தின் கூட்டம் நடைபெறும் போது, மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும். அணையை கட்டக்கூடாது என விவசாயி கள் கல்லணையில் நடத்திய போராட் டம் தொடர்பாக எனக்கு எதுவும் தெரி யாது.

தமிழக அரசு மேகதாது அணை தொடர்பாக, ஆணையக் கூட்டத்தில் விவாதிக்க கூடாது என கூறுவது குறித்து, தமிழக அரசிடம்தான் கேட்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் என்பது சுதந்திரமான அமைப்பாகும். உச்சநீதிமன்றம் பிறப் பித்த ஆணையின் படி,  நீர் பங்கீட்டை  செயல்படுத்துவதுதான் ஆணையத் தின் பணி” என்றார். பிறகு, ஹல்தரிடம் விவசாயிகள் வெ. ஜீவக்குமார், விசுவநாதன் ஆகியோர் மனு அளித்தனர். அம்மனுவில், “தமிழ கத்தில் காவிரி நீரை நம்பி 20 லட்சம்  ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது போதிய நீர் கிடைக்காததால், 12 லட்சம் ஏக்கராக சாகுபடி பரப்பு குறைந்துவிட்டது. கர்நாடக அரசு மேக தாதுவில் அணை கட்டினால், தமிழ கத்தில் குடிநீர் பற்றாக்குறையும், ஒட்டு மொத்தமாக விவசாயமும் பாதிக்கப் படும். எனவே, மேகதாதுவில் அணை  கட்டக் கூடாது. ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவா தத்துக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது. தமிழகத்துக்கு உரிய மாதாந்திர நீர் பங்கீடை பெற்றுத் தர வேண்டும்” என  குறிப்பிட்டிருந்தனர்.  முன்னதாக, காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் கர்நாடக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக வும், காவிரி மேலாண்மை ஆணை யத்தை கலைக்க வேண்டும் என்பதை  வலியுறுத்தியும், ஆய்வுக்கு வந்த  ஆணையக் குழுவினருக்கு விவசாயி கள் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50க்கும்  மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.