தஞ்சாவூர், ஜூலை 28- ஆலடிக்குமுளை ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அருகே பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் பூம்பூம் மாட்டுக்காரர்கள் சாதிச்சான்று இல்லா மல் இருந்தனர். இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் சூர்யா புகழேந்தி நமக்கு தெரிவித்த தகவலின் அடிப்ப டையில், நேரில் சென்று ஆய்வு செய்து, தீக்கதிரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விரிவான செய்தி வெளி யிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த மக்களின் 40 வருட கனவுகளை நிறைவேற்றும் வகையில், ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 30 நபர்களுக்கு ‘இந்து ஆதியன்’ என்னும் சாதி சான்றி தழை, வட்டாட்சியர் ராமச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் ராமலிங்கம், கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன் முன்னிலையில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர் வழங்கினார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் சூர்யா புகழேந்தி, பள்ளி வளர்ச்சி குழு செயலாளர் புகழேந்தி, ஊராட்சி மன்ற உறுப்பினர் நாகலட்சுமி மற்றும் கிரா மத்தினர் உடனிருந்தனர்.
தீக்கதிருக்கு நன்றி
செய்தி வெளியிட்டு, இந்த மக்களுக்கு இந்து ஆதியன் என்ற மலைவாழ் மக்களுக்கான சாதிச் சான்றிதழ் பெற கார ணமாக இருந்த தீக்கதிர் நாளிதழுக்கு, ஊராட்சி மன்ற தலைவர், பூம்பூம் மாட்டுக்காரர்கள் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.