தஞ்சாவூரில் புத்தகக் கண்காட்சி கடந்த ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கண்காட்சியில் பாரதி புத்தகாலயம் சார்பில் எண்.20, 21 ஆகிய அரங்குகள் அமைக்கப்பட்டு, பல்வேறு வகையான தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் ஆதரவு அதிகமாக உள்ளது. ஏராளமான மாணவ, மாணவிகள் பாரதி புத்தகாலய அரங்கை பார்வையிட்டு நூல்களை வாங்கி செல்கின்றனர். முஹம்மது சிராஜுதீன் தலைமையில், நிர்வாகிகள் நூல் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.