தஞ்சாவூர், ஜூலை 1- தஞ்சாவூர் மாநகராட்சியின் சாதாரண கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் புண்ணிய மூர்த்தி பேசுகையில், கொண்டிராஜபாளை யம் அருகே உள்ள தற்காலிக மீன் சந்தை யால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படு கிறது. எனவே மீன்சந்தையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றார். இதற்கு மேயர் கீழவாசலில் ஏற்கனவே மீன்சந்தை செயல் பட்ட இடத்தில், புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு அங்கு விரைவில் இடமாற்றம் செய்யப்படும் என்றார். மாமன்ற உறுப்பினர் மேத்தா, தஞ்சாவூர் அரண்மனை மைதானம் பூட்டப்பட்டுள்ள தால் அங்கு செடி, கொடிகள் மண்டிக் கிடக் கின்றன. குப்பை மேடாக உள்ள அந்த இடத்தை சுத்தம் செய்து கொடுத்தால் பொது மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என்றதற்கு, ஆணையர், அந்த மைதானத்தில் புத்தக திருவிழா நடைபெற உள்ளதால் சுத்தம் செய்யப்படுகிறது. அதைத் தொடர்ந்து பொதுமக்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மாமன்ற உறுப்பினர் கோபால் கூறுகை யில், நான்கு ராஜவீதிகளில் நடைபெறும் கழிவுநீர் வாய்க்கால் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். காமராஜர் காய்கறி மார்க்கெட்டை உடனடியாக திறந்து பழைய வியாபாரிகளுக்கே வழங்க வேண்டும் என்றார். மாமன்ற உறுப்பினர் கேசவன், 30 ஆவது வார்டு உள்பட மாந கரில் பல இடங்களில் வாய்க்கால்களில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதால், தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மழைக்காலம் தொடங்கும் முன்பாக வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்றார். இதற்கு மேயர், விரைவில் தூர்வாரும் இயந்திரம் வாங்கப்பட இருக்கிறது. அந்த இயந்திரம் வந்தவுடன் பணிகள் மேற்கொள்ளப் படும் என்றார். இதேபோல் பல உறுப்பினர்களும் தங்க ளது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி, அதற்கான மனுக்களை வழங்கினர்.