தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பெருமாள் கோயில் ஊராட்சியில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம், ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடையை பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா திறந்து வைத்தார். இதில், பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.