districts

img

மணல்சிற்பம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெண் தன்னார்வலர்

தஞ்சாவூர், மார்ச் 20 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த காலகம் பகுதியைச் சேர்ந்தவர் இரா ஜேந்திரன்-பானுமதி தம்பதி (விவசாயி). இவரது மகள் இரா.ரதி (41) எம்.எஸ்.சி.,  எம்.ஃபில், மைக்ரோபயாலஜி பட்டதாரியான  இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.  வீட்டருகே உள்ள குழந்தைகளுக்கு டியூசன் நடத்தி வந்த நிலையில், சில ஆண்டு கள் தனியார் நர்சரிப் பள்ளியிலும், சில ஆண்டு கள் தனியார் பாரா மெடிக்கல் கல்லூரியில் ஆசிரியராகவும் பணியாற்றிய இவருக்கு நிரந்தரப் பணி ஏதும் கிடைக்காத நிலை யில், தற்போது பெற்றோருக்கு உதவியாக  விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.  தற்போது தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில், தன்னார்வலராகப் பணி யாற்றி வரும் இவர் 21 குழந்தைகளுக்கு பாடம்  நடத்தி வருகிறார்.  இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பள்ளி  மேலாண்மை குழு கூட்டம் மாவட்டம் முழுவ தும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடை பெற்றது. பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை  குழு உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற இக்கூட்டத் தில், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை கவரும் விதமாக ‘நம் பள்ளி, நம் பெருமை’ என்ற தமிழக அரசின் பள்ளி மேலாண்மை குழு விற்கான லோகோவை மணல் சிற்பமாக ரதி  வடிவமைத்துள்ளார்.  தன்னார்வலர் ரதி உருவாக்கி உள்ள  மணல் சிற்பத்தை கிராமத்தினர், மாணவர்கள்  பார்த்து ரசித்து செல்கின்றனர்.