தஞ்சாவூர், ஜூன் 14 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட கட்டணமில்லா கழிப்பறை, கட்டப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் பேராவூரணி பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் தங்கள் இயற்கை உபாதையை கழிக்க கட்டணக் கழிப்பறையை தேடிச் செல்லும் நிலை உள்ளது. எனவே உடனடியாக பேரூராட்சி நிர்வாகம், கட்டி முடிக்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் பூட்டிக் கிடக்கும் பொதுக் கழிப்பிட கட்டிடத்தை திறந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே கழிப்பறை ஏற்கனவே கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும் முன்னர் முழுவதுமாக இடிக்கப்பட்டு மீண்டும் கட்டப் பட்டது குறிப்பிடத்தக்கது.