districts

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் தலையாட்டி பொம்மைகள் விற்பனை அரங்கு துவக்கம்

தஞ்சாவூர், ஜூன் 8   தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்டம் மற்றும்  மகளிர் திட்டம் சார்பில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ள, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் காட்சி மற்றும் விற்பனை அரங்கினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் புதன்கிழமை துவக்கி வைத்தார்.  பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், புவி சார் குறியீடு பெற்றுள்ள உற்பத்தி பொருட் களை விற்பனை செய்வதற்காக இந்திய ரயில்வே அமைச்சகம் முக்கிய ரயில் நிலையங் களில் “ஒரு ரயில் நிலையம் - ஒரு உற்பத்தி  பொருள்” என்ற தலைப்பின் கீழ் கடைகள் அமைத்திட அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் புவிசார் குறியீடு பெற்றுள்ள “தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்” விற்பனை செய்வதற்காக தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தின் சார்பில் விற்பனை அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த விற்பனை அரங்கில் தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோவில் ஊராட்சி யினை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உற்பத்தி செய்யும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், நடமாடும் பொம்மைகள், பொய்க்கால் குதிரைகள் உள்ளிட்ட பல வகையான பொம்மைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன” என்றார்.