தஞ்சாவூர், மே 18 - தஞ்சாவூர் ரயில் நிலையத்தில், பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என ரயில்வே அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட “பய ணிகள் சேவைக் குழுவினர்” செவ்வாயன்று ஆய்வு மேற்கொண்டனர். தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு, பயணிகள் சேவைக் குழுவின் உறுப்பினர்கள் ஜெயந்திலால், பபிதா பிரமோர், பிரமோத்குமார் சின்ஹா ஆகியோர் வருகை தந்தனர். அவர்களை திருச்சி கோட்ட வணிக உதவி மேலாளர் எம்.சந்திரசேகரன் வரவேற்றார். பின்னர் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வ றையில் உள்ள கழிப்பறை, ரயில் நிலையத்தில் வைஃபை வசதிகள், பிளாட் பாரங்களில் உள்ள மேற் கூரைகள், மின் விளக்குகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், ரயில் நிலையத்தில் உள்ள தேநீர் கடை கள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் தரம், அதன் விலை ஆகிய வற்றை விற்பனையாளர்களிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து, ரயில் பயணிகளிடம் குடிநீர், தூய்மை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது பயணி கள் சிலர், “மின்விசிறி, அமருவதற்கு இருக்கைகள் போதியளவு இல்லை எனவும், இரண்டாவது பிளாட் பாரத்தில் மேற்கூரையை நீட்டிக்க வேண்டும்” எனவும் கூறினர். இதனை குழுவின் உறுப்பினர்கள் குறிப்பெ டுத்துக் கொண்டனர்.
கோரிக்கை மனு
இதையடுத்து தஞ்சாவூர் - திருச்சி ரயில் பயணிகள் சங்க செயலாளர் வெ.ஜீவக்குமார் அளித்த மனுவில், தஞ்சாவூர் - திருச்சி இடையே ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மின்சார டெமு ரயில் இயக்க வேண்டும். தஞ்சா வூர் ரயில் நிலையத்தில் இரண்டாவது நுழைவு வாயிலில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய டிக்கெட் வழங்கும் கவுண்டரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாங்கண்ணி திருவிழா காலங்களில் அனைத்து விரைவு மற்றும் பயணிகள் ரயில்களில் கூடுதல் பெட்டி களை இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மாரியம்மன்கோவில் ரயில் நிலையம் தஞ்சாவூர் அருகே திருவாரூர் மார்க்கத்தில் உள்ள மாரியம்மன்கோவில் ரயில் நிலையம் கடந்த பல ஆண்டு களாக முழுமையாக செயல்பட்டு வந்தது. அந்த ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களும், தஞ்சாவூரின் புறநகர் பகுதி மக்களும் பயன் படுத்தி வந்த நிலையில், தற்போது பயணிகள் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால், கடந்த மூன்றாண்டு களுக்கு முன் இந்த ரயில் நிலையம் மூடப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் தினமும் பாதிக்கப்படு வதால், இந்த ரயில் நிலையத்தை மீண்டும் திறந்து ரயில் களை நிறுத்தி, பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல நட வடிக்கை எடுக்க வேண்டும் என மாரியம்மன்கோவில் ரயில் நிலைய மீட்பு ஒருங்கிணைப்பாளர் வி.எஸ்.இளங் கோவன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.
பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை வட்டார ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஜெயராமன் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், “பட்டுக்கோட்டை- தஞ்சாவூர்- அரியலூர் ரயில் பாதை பணியை உடனே தொடங்க வேண்டும். மயி லாடுதுறை - காரைக்குடியை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயிலை ஞாயிற்றுக்கிழமையும் இயக்க வேண்டும். காரைக்குடி - சென்னை இடையே புதிய ரயிலை இயக்க வேண்டும்” என கூறியுள்ளனர்.
இருப்புப்பாதை காவலர்கள் கோரிக்கை
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இருப்பு பாதை காவல் நிலையம் உள்ளது. இதில் 40 காவலர்கள் பணி யாற்றி வருகின்றனர். ஆனால் உடைமாற்ற, ஓய்வெ டுக்க போதிய இடமில்லாமல் அவதிப்படுவதாக கூறி, உரிய இடம் ஒதுக்கீடு செய்து தருமாறு, பயணிகள் சேவைக் குழுவினரிடம் மனு வழங்கினர்.