தஞ்சாவூர், ஏப்.25 - தஞ்சை ரயில் நிலையத் தில் நெட்டி வேலைப்பாடு கலைப் பொருட்களின் விற் பனை எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளதால் கலைப் பொருட்கள் விற்ப னைக் காலம் நீட்டிக்கப் பட்டுள்ளது. உள்ளூர் தயாரிப்புகளை ஊக்கப்படுத்தி, அவற்றின் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், ரயில் நிலையங்க ளில் விற்பனை நிலையங்கள் அமைக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டிருந்தது. தஞ்சாவூர் என்றால் புவியியல் குறியீடு பெற்ற நெ ட்டி கலைப்பொருட்கள்தான் நினைவுக்கு வரும். அந்த வகையில் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் “ஒரு ரயில் நிலையம் ஒரு பொருள்” என்ற திட்டத்தின் கீழ் நெட்டி கலைப் பொருட்கள் விற்பனை கடந்த ஏப்ரல் 9 அன்று தொடங்கியது. பல்வேறு தெய்வங்க ளின் உருவங்கள், தஞ்சை பெரிய கோயில், இயற்கை காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு வகை வேலைப் பாடுகளுடன் கூடிய நெட்டி கலைப் பொருட்களுக்கு பொதுமக்கள், பயணிகளிட மிருந்து நல்ல வரவேற்பு இருந்தது. ஏப்ரல் 24 வரை 15 நாட்களுக்கு நடைபெற்ற விற்பனையில், நெட்டி கலை பொருட்கள் ரூ.59,885 அள விற்கு விற்பனையாகி யுள்ளது. இந்த குறுகிய கால விற்பனை திட்டத்திற்கு ரயில்வே நிர்வாகம் தேவைப்பட்ட மின்சார வசதி யுடன் இலவசமாக ரயில் நிலையத்தில் பயணிகள் பார்வையில் படும் முக்கிய இடத்தை வழங்கியது. இரண்டாம் கட்டமாக, தஞ்சாவூர் ரயில் நிலை யத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் மே 8 வரை மற்றொரு நெட்டி கலைப்பொருட்கள் தயாரிப்பாளர் மூலமாக உள்ளூர் கைவினை கலை ஞர்களுக்கு பயன்படும் திட்டம் மேலும் 15 நாட்க ளுக்கு தொடர்கிறது என ரயில்வே அதிகாரிகள் தெரி வித்தனர்.