districts

கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்: முதல்வருக்கு தஞ்சை விவசாயிகள் நன்றி

தஞ்சாவூர், ஜூலை 30 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த (23.5.2022) அன்று வேளாண்மை - உழவர் நலத் துறை சார்பில் 1,997 கிராமப் பஞ்சா யத்துகளில் உள்ள 9 லட்சம் விவசாயக் குடும்பங் கள் பயன்பெறும் வகையில், ரூ.227 கோடி மதிப்பிலான கலைஞரின் அனைத்து கிராம ஒருங் கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க, முதல்  வேளாண்மை நிதி நிலை அறிக்கையை 14.8. 2021 அன்று வேளாண்மை - உழவர் நலத்துறை  அமைச்சர் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.  கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், அனைத்து  கிராமங்களும் ஒட்டுமொத்த வளர்ச்சியடைந்து தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். தமிழ்நாடு முதலமைச்சரின் பத்தாண்டு தொலைநோக்கு திட்டமான 11.75 லட்சம் ஹெக் டேர் நிலங்களை கூடுதலாக சாகுபடிக்கு கொண்டு வருதல், இருபோக சாகுபடி பரப்பினை  20 லட்சம் ஹெக்டேராக உயர்த்துதல், உணவு தானியங்கள் மற்றும் தேங்காய், பருத்தி, சூரிய காந்தி,  நிலக்கடலை பயிர்களின் ஆக்கத்  திறனில் தேசிய அளவில் முதல் மூன்று  இடங்களை பிடித்தல் ஆகிய தொலைநோக்குத் திட்டங்களை அடைந்திடும் வகையில் கலை ஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப் படுகிறது.

2021 - 22 ஆம் ஆண்டில் 1,997 கிராமப் பஞ்சா யத்துகளில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட் டத்தின் கீழ், தென்னங்கன்றுகள், பயறுவகை விதைகள், தெளிப்பான்கள், வீட்டுத் தோட்டம்  அமைக்க காய்கறி தொகுப்புகள், தோட்டக்கலை  பயிர் சாகுபடிக்கு ஊக்கத் தொகை பழக்கூடை கள் மற்றும் ட்ரம், பழச்செடிகள், மரக்கன்று தொகுப்புகள், தரிசு நிலத் தொகுப்புகளில் ஆழ்துளை/குழாய்க்கிணறு அமைத்தல், ஆதி திராவிட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத் தில் கிணறு அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்தல், பண்ணைக் குட்டை அமைத்தல், சிறுபாசன குளங்கள், குளங்கள், ஊரணிகள், வரத்து கால்வாய்கள் தூர்வாருதல் போன்ற செயல்பாடுகள் இக்கிராமப் பஞ்சாயத்துகளிலும் செயல்படுத்தப்படும். இத்திட்டம் குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்த தாவது: “தஞ்சாவூர் மாவட்டத்தில் இத்திட்டமானது முதற்கட்டமாக 2021-22 ஆம் ஆண்டு 73 கிராம  பஞ்சாயத்துகள் சிறப்பாக செயல்பட்டு வரு கிறது. இத்திட்டத்தின் கீழ் தரிசு நிலங்கள் கண்ட றியப்பட்டு சாகுபடி நிலமாக மாற்றப்படுகின்றன. தஞ்சாவூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 310.5 ஏக்கர் நிலங்களில் 14 தரிசு தொகுப்புகள் கண்டறி யப்பட்டு அதில் உள்ள முட்புதர்களை அகற்றி, திருத்தம் செய்து வேளாண் பொறியியல் துறை யுடன் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி இத்திட்டத்தின் கீழ் ஒரு பண்ணை குடும்பத்திற்கு மூன்று தென்னை மரக்கன்றுகள் வீதம் ஒரு கிராமத்திற்கு 200  பண்ணை குடும்பங்களுக்கு 43,800 தென்னை  கன்றுகள் முழு மானியத்தில் வழங்கப்பட்டு உள்ளன. வரப்பு பயிரை ஊக்குவிக்கும் வகை யில் கிராமங்களில் ஒரு ஹெக்டேருக்கு 5 கிலோ  உளுந்து விதைகள் மானியத்தில் கொடுக்கப் பட்டு, ஒரு கிராமத்திற்கு 15 ஹெக்டேர் வீதம் வரப்பு  பயிர்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.  விவசாயிகளுக்கு கைத்தறிப்பான்கள் மற்றும் விசைத் தெளிப்பான்கள் ஒரு கிராமத் திற்கு ஐந்து என்ற வீதம் கொடுக்கப்பட்டு மொத்தம்  730 தெளிப்பான்கள் 50 சதவீத மானியத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.  கால்நடைகளின் நலம் காத்து பால் உற்பத்தி யினை பெறுகிற கால்நடை துறையின் மூலம் கால்நடை மருத்துவ முகாம்கள் மற்றும் புதிய பால்  சொசைட்டிகள் உருவாக்குதல் போன்ற பணிகள்  நடைபெற்று வருகின்றன. கூடுதலாக 80 சதவீத இதர திட்டங்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்துகளில் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு கிராம பஞ்சாயத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில், இந்த திட்டமானது சிறப்பாக வடிவமைக்கப்பட்ட செயல் படுத்தப்பட்டு வருகிறது” என்றார்.  இதில் பயனடைந்த தஞ்சாவூர் விவசாயி கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.  தொகுப்பு  க.பிரேமலதா  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,

- தஞ்சாவூர்.