districts

நாளை தொழிற்பழகுநர்  பயிற்சி சேர்க்கை முகாம்

தஞ்சாவூர், ஜூன் 11-  தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின்கீழ், தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஜூன் 13 ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 9  மணியளவில் நடைபெற உள்ளது. இந்த முகாமில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு  அரசு போக்குவரத்து கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான  கழகம், ஆவின் உள்ளிட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்கள்,  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னணி நிறுவ னங்கள், தொழிற்பழகுநர் பயிற்சிக்கு, பட்டப்படிப்பு, பட்டயப்  படிப்பு, ஐடிஐ தொழிற்பயிற்சி பெற்றவர்களை தேர்வு செய்ய  உள்ளனர். மேலும் 8, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு கல்வித்தகுதி உடை யவர்களை நேரடியாக தொழிற்சாலைகளில் புதிய பயிற்சி யாளராக சேர்த்து 3 முதல் 6 மாதகால அடிப்படைப் பயிற்சி யும், ஓராண்டு முதல் ஈராண்டுகள் வரை தொழிற்பழகுநர் பயிற்சியும் பெற்று, தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம். இத்தொழிற்பழகுநர் பயிற்சிக்கு உதவித்தொகை ரூ.7  ஆயிரம் முதல் நிறுவனத்தால் வழங்கப்படும். இச்சான்றிதழ் பெறுவதன் மூலமாக அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் முன்னுரிமை, இந்திய அளவிலும், அயல்நாடுகளி லும் பணிபுரிந்திட பயனுள்ளதாக அமையும். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும்,  மேலும் தகவல்களுக்கு, உதவி இயக்குநர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், தஞ்சாவூர். தொலைபேசி எண்:04362-278222 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட  ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.