districts

img

செயற்கைக்கோள் தயாரிப்பு பயிற்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு  

தஞ்சாவூர், நவ.13-  பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கவுசல்யா, கலைமகள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியரு மான சத்யா ஆகியோர் அரசுப் பள்ளி மாணவர்களுக் கான, முதல் செயற்கைக் கோளான அகஸ்தியர் சுற்றுச்சூழல் மாணவர் செயற்கைக்கோள் தயாரிப்பு பயிற்சிக்கு சென்று வந்தனர். இவர்களைப் பாராட்டி பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) திராவிடச்செல்வம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் உடனிருந்தார்.  அப்போது அவர்களிடம், பெங்களூர் இஸ்ரோ நிறுவனத்தில் பெற்ற பயிற்சி குறித்தும், அங்கு நடந்த நிகழ்வுகள் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளான சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வாசகம் ஆகியோருடனான மாணவிகளின் சந்திப்பு குறித்தும், இஸ்ரோ செயற் கைக்கோள் தயாரிப்பு மையங்கள் பற்றியும் உரை யாடி தெரிந்து கொண்டார். இந்தியாவின் முதல் மாண வர் செயற்கைக் கோளான ‘அகஸ்தியர்’ ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.