districts

img

இஸ்ரோ பயிற்சிக்கு செல்லும் மாணவிகளுக்கு பாராட்டு

தஞ்சாவூர், அக்.9 - இஸ்ரோ விண்வெளி  ஆராய்ச்சி நிலையத்திற்கு செல்லும் பள்ளி மாணவி களை பட்டுக்கோட்டை இந்தியன் ஆயில் முரு கையா ஏஜென்சி நிறுவனத்தி னர் பாராட்டி, ஊக்கத் தொகை வழங்கி கெளர வித்தனர். இந்தியன் ஆயில் நிறு வனம் மற்றும் அரசு பொது சுகாதாரம் மற்றும் மருந்து துறை சார்பில், வாடிக்கை யாளர்களுக்கான “சூப்பர் சனிக்கிழமை” நிகழ்ச்சியில், இஸ்ரோவின் ராக்கெட் தொழில்நுட்பத்தில் தேர்வா கியுள்ள, பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் எஸ்.கவுசல்யா, எஸ்.கலைமகள் ஆகிய இருவருக்கும் முரு கையா ஏஜென்சி சார்பாக ஊக்கத் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கா. மாரிமுத்து மாணவிகளுக்கு பரிசளித்து பாராட்டினார்.  நகர்மன்றத் தலைவர் சண்முகப்பிரியா இலவச பொது மருத்துவ முகாமை யும், நகர்மன்ற துணைத் தலைவர் பி.சுரேஷ் பல் மருத்துவ முகாமையும் தொ டங்கி வைத்தனர். இந்தியன் ஆயில் கழக விற்பனை மேலாளர் ஹரிகோவிந்த், வாடிக்கையாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.