கும்பகோணம், ஜூலை 28- கென்யா நாட்டிலுள்ள நைரோபியை சேர்ந்த 8 பரதம் கற்கும் மாணவிகள், புதுச்சேரியை சேர்ந்த பரதநாட்டியப் பேராசிரியை ஷெல்லா தலைமையில் வியாழனன்று கும்பகோணம் பாபுராஜபுரம் ஊராட்சி திம்மக்குடியில் அமைந்துள்ள அருள்ஜோதி அரசு உதவிபெறும் தொடக் கப் பள்ளியில், கிராமப்புறத்தைச் சேர்ந்த பள்ளி மாண வர்களை ஊக்கும் வகையில் பரத நாட்டியமாடினர். இதையறிந்து கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் நேரில் சென்று, மாணவிகளின் பரதநாட்டிய நடனத்தை கண்டுகளித்து, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்து, இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில், பள்ளி செயலாளர் டி.பாலசுப்பிரமணி யன், தலைமையாசிரியர் எஸ்.சாந்தி, உதவி ஆசிரியர் ரா.கலைச்செல்வி, கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ.சுதாகர், ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ் வரி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.செல்வராஜ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.