தஞ்சாவூர், மார்ச் 17- தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ் வளர் மையம் மூலமாக ஜெர்மனியின் புகழ் பெற்ற கொலோன் பல்கலைக்கழகத் தெற்கா சிய-தென்கிழக்காசிய மொழிகள் துறை மாண வர்களுக்குத் தமிழ்மொழி-பண்பாட்டுப் பயிற்சி வழங்கும் பயிலரங்கத்தின் நிறைவுவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொலோன் பல்கலைக்கழகத்திலிருந்து பேராசிரியர் ஸ்வென் வர்ட்மன் தலைமையில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் வளர் மையம் மூலமாக, தமிழ்மொழிப் பண்பாட்டுப் பயிற்சி ஐந்து நாட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏற்புரையாற்றிய, “ஸ்வென் வர்ட்மன், கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் தமிழரல்லாத அயலக மாண வர்களுக்கான பயிலரங்கம் பெரும் பயனைத் தந்தது. இப்பயிற்சிகளை ஆண்டுதோறும் வழங்க வேண்டும்” என்றார். இப்பயிற்சியில் பங்கேற்ற ஜெர்மனி நாட் டைச் சேர்ந்த மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கிப் பேசிய துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன், “அயல்நாட்டைச் சேர்ந்தவர் களுக்கு இனி ஆண்டுதோறும் இருவார காலம் தமிழ்மொழி-பண்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும்” என்றார். இதில், உலகமொழிகளில் தமிழ் பெறும் இடம் குறித்து பேராசிரியர் கு.வெ.பாலசுப்ரமணி யம், ஓலைச்சுவடிகள் குறித்த காட்சி விளக்கத் தைப் முனைவர் கோவைமணி, மரபுசார் தமிழ் மருத்துவ முறைகள் பற்றி முனைவர் அன்பு ஜெப சுனில்சன், கடல்சார் தமிழக வரலாறு குறித்து முனைவர் செல்வக்குமார் ஆகியோர் வகுப்புகள் எடுத்தனர். பல்கலைக்கழக நூலகம் பற்றி முனைவர் வேல்முருகன், பல்கலைக்கழக அருங்காட்சியக வரலாறு குறித்து முனைவர் ராஜா ஆகியோரும் நேரடி விளக்கமளித்தனர். இப்பயிலரங்கத்தின் நிறைவு விழாவில், மாண வர்கள் தங்களின் பயிற்சி குறித்த விளக்கங் களைப் பகிர்ந்து கொண்டனர். பல்கலைக்கழகப் பதிவாளர்(பொ) முனை வர் தியாகராஜன் வரவேற்றார். கலைப்புல முதன்மையர் முனைவர் இளையாப்பிள்ளை வாழ்த்துரையும், பயிலரங்க ஒருங்கிணைப்பா ளர் முனைவர் குறிஞ்சிவேந்தன் பயிலரங்க அறிக்கையையும் வழங்கினர். ஜெர்மனி மாண வர்கள் சார்பில் தில்சன் நன்றி கூறினார். மாண வர்கள், பேராசிரியர்கள், பல்கலைக்கழக மக் கள் தொடர்பு அலுவலர் முனைவர் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.