districts

img

பழங்கால நாணயங்களை அரசுப் பள்ளியில் காட்சிப்படுத்தும் ஆட்டோ ஓட்டுநர் ஆர்வத்துடன் ரசித்த மாணவர்கள்

தஞ்சாவூர், மார்ச் 9-  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியை சேர்ந்தவர் கதிரேசன் (31),. காசு கதிரேசன் என்ற பெய ரில் இப்பகுதியில் நன்கு அறி முகமானவர். பி.ஏ., தமிழ் படித்துள்ளார். தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார்.  இவர் ஓட்டைக் கால ணாக்கள், 1862 இல் வெளி வந்த விக்டோரியா ராணி  உருவம் பொறித்த நாணயம்,  1835-இல் வெளிவந்த கிழக் கிந்திய கம்பெனியின் நாண யங்கள், சோழர்கள், முகலா யர்கள் காலத்து நாணயங் கள், இந்திய நாட்டின் 10,20, 25,50 பைசா நாணயங்கள், 1906 மற்றும் 1919 ஆண்டு வெள்ளிக் காசுகள், சிங்கப்  பூர், மலேசியா, அமெரிக்கா,  நைஜீரியா, சீனா, தாய் லாந்து, எகிப்து உள்ளிட்ட நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை சேகரித்து வைத்துள்ளார். இந்நிலையில், தான் சேக ரித்து வைத்துள்ள நாண யங்களை பள்ளி மாணவர் களிடம் காட்சிப்படுத்தி, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என  பள்ளிக்கல்விதுறை உயர்  அதிகாரிகளிடம் அனும திக்கேட்டார். இதன்பேரில், பட்டுக்கோட்டை, பேராவூ ரணி என ஏழு ஒன்றியங்க ளில் கண்காட்சி நடத்த அனு மதி்த்தனர். இதன்படி, பேராவூரணி ஒன்றியத்துக்குட்பட்ட குறிச்சி அரசு நடுநிலைப் பள்ளியில் காசு கதிரேசன், நாணயங்களை காட்சிப் படுத்தி மாணவர்களுக்கு விளக்கமளித்தார். மாண வர்கள் ஆர்வத்துடன் ரசித்  தும், கேட்டும் தெரிந்து  கொண்டனர். கதிரசேனை  பள்ளியின் தலைமையாசிரி யர் முருகேசன், ஆசிரியர் கள் தமிழரசன், செந்தில் குமார், காளீஸ்வரி ஆகி யோர் பாராட்டினர்.