districts

img

அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை விளக்கி அனைத்து தொழிற்சங்க ஆர்ப்பாட்டம்

தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு மார்ச் 28, 29 தேதிகளில் நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை விளக்கி அனைத்து தொழிற்சங்க ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிஐடியு மாவட்ட செயலாளர் சி.ஜெயபால், தொமுச மாவட்டச் செயலாளர் கு.சேவியர், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் தில்லைவனம், ஐஎன்டியூசி மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், ஏஐசிசிடியூ மாவட்டச் செயலாளர் ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.