districts

பாரபட்சமாக செயல்படும் வேளாண்துறை அதிகாரிகள் முற்றுகைப் போராட்டம் நடத்த சிபிஎம் முடிவு

தஞ்சாவூர், மார்ச் 16 - பாரபட்சமாக செயல்படும் பேராவூரணி வேளாண்துறை அதிகாரிகளை கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த திருச்சிற்றம்பலத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு கூட்டம்  ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.வி.குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.சி.பழனிவேலு, ஆர்.வாசு, ஒன்றியச் செயலாளர் எம்.இந்துமதி ஆகியோர் பேசினர்.  கூட்டத்தில், “பிரதம மந்திரி விவசாயிகள் நிவாரண நிதித் திட்டத்தில், பின்னவாசல் கிரா மத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்ற விவசாயி யிக்கு, ஒரு ஆண்டு மட்டுமே நிவாரண நிதி  வந்த நிலையில், தற்போது நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. வேளாண் அதிகாரிகள் கேட்டி ருந்த (ஆதார் அட்டை, குடும்ப அட்டை, தனி நபர் பட்டா, கணினி சிட்டா, அடங்கல்) ஆவ ணங்களை கொடுத்த நிலையிலும், கடந்த 18 மாதங்களாக வேளாண் அலுவலகத்திற்கு வரவழைத்து, விசாரணை நடத்துகிறோம் என்ற பெயரில் அலைக்கழிக்கும் போக்கு தொ டர்கிறது. இதேபோல் பல விவசாயிகள் பாதிக் கப்பட்டுள்ளனர்.  மேலும், அரசின் சார்பில் வழங்கும் மானி யங்கள், இடுபொருட்கள், களையெடுக்கும் இயந்திரம், தண்ணீர் இரைக்கும் இயந்திரம், தார்ப்பாய், தேனி வளர்ப்பு பெட்டி, பி.வி.சி பைப் உள்ளிட்ட விவசாயக் கருவிகளை வேண்டியவர்களுக்கு மட்டும் தரும் போக்கு  தொடர்கிறது.  மேலும், இதுகுறித்து விவசாயிகளுக்கு தெரியும் வகையில், பகிரங்கமாக எந்த அறி விப்பும் செய்வதில்லை. எனவே, இதனை கண்டித்தும் தகுதியுள்ள அனைத்து விவசாயி களுக்கும் அரசின் திட்டங்கள் அனைத்தும் கிடைத்திட, வேளாண் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி பேராவூரணி வேளாண் துறை அலுவ லகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் படும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.