தஞ்சாவூர், பிப்.21- நிலக்கடலை பயிரில் கூடுதல் மகசூல் பெற நுண்ணூட்டச் சத்து கரைசல் தெளிப்பது அவசியம் என வேளாண் துறை சார்பில் விவசாயி களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண் உதவி இயக்கு நர் (பொ) சங்கவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: “நடப்பு பருவத்தில் மார்கழிப் பட்டம் சேதுபாவாசத்திரம் வட்டா ரத்தில் சுமார் 1,500 ஏக்கருக்கு மேல் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. அவை இப்போது வளர்ச்சி பருவம், விழுது இறங்கும் பருவம். நிலக்கடலை பயிரில் கூடுதல் காய் பிடிக்கும் பருவம் என பல நிலை களில் உள்ளது. இத்தருணத்தில் நுண்ணூட்டச் சத்து கரைசல் தெளிப்பது மிகவும் அவசியம். ஒரு ஏக்கருக்கு தேவை யான கரைசலை தயாரிக்க டிஏபி 1 கிலோ, அம்மோனியம் சல்பேட் 400 கிராம், பொட்டாஷ் 1 கிலோ, பிளா னோபிக்ஸ் 125 மில்லி ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றில் டிஏபி உரத்தை நன்கு தூள் செய்து 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாளே ஊற வைக்க வேண்டும். மறுநாள் தெளிந்த கரை சலை மட்டும் எடுத்துக் கொண்டு, அத்துடன் பிளானோபிக்ஸ் தவிர்த்து, பிற பொருட்களை, 200 லிட்டர் தண்ணீரில் கலக்கி, அந்த கல வையை 1 ஏக்கர் பரப்பில் மாலை நேரத்தில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். பிளானோபிக்ஸ் பயிர் ஊக்கி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் தனியாக கலந்து தெளிக்க வேண் டும். இம்மாதிரியான கரைசலை விதைத்த 25 மற்றும் 40 ஆவது நாள் என இரண்டு முறை தெளிக்க வேண்டும். 45 ஆவது நாள் பூக்கும் தருணத்தில் களைக்கொத்தி மண் அணைக்கும் முன், ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். பயிர் ஊக்கி மருந்து தெளிப்பதால் பூக்கள் உதிர்வது தடுக்கப்பட்டு, அத்தனை பூக்களும் விழுதுகளாக மாறுகின்றன. நுண்சத்து கரைசல் தெளிப்பு மற்றும் ஜிப்சம் இடுவதால் திரட்சி யான, தரமான கடலை பருப்புகள் உருவாகிறது. இதனால் 1 ஏக்கரில் 25 முதல் 30 விழுக்காடு வரை கூடுதலாக மகசூல் கிடைக்கிறது. எனவே நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து அதிக லாபம் பெறலாம்.” இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.