districts

img

சாக்கடையாக மாறிய ஆதிரெங்கன் குளம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பாபநாசம், ஏப்.17 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தைச் சேர்ந்த பசுபதிகோயிலில் பகுதியில் பல்லாயிரம்  மக்கள் வசிக்கின்றனர். பசுபதிகோயில் கண்டியூர் சாலை கபிரியேல்புரத்தில் ஆதிரெங்கன் குளம் உள்ளது. இந்தக் குளம் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்டது. 20  ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் பயன்பாட்டில் இருந்த இந்த குளம், தற்போது சாக்கடையாகி பன்றிகள் மேயும்  இடமாக மாறிவிட்டது. அத்துடன் பல்வேறு தொற்று வியாதிகளை பரப்பும்  இடமாகவும் உள்ளது. இந்தக் குளத்தைச் சுற்றி குடியிருப் புகள் அமைந்துள்ளன. இந்த குளத்தின் கரை ஆக்கிர மிக்க ப்பட்டிருப்பதால், தற்போது குளம் இருந்த தடயமே தெரியாமல் போய்விட்டது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், 20 வருடங்களுக்கு முன்பு இந்தக் குளத்தை மக்கள் குளிக்க பயன்படுத்தி வந்தனர்.  மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி குளத்தை தூர்வாரி, படித்துறை அமைப்பதுடன், குளத்தைச் சுற்றிச்  சுவர் எழுப்ப வேண்டும் என்றனர்.