districts

கொள்ளிடம் ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறப்பு கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

கும்பகோணம், அக்.19 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நீலத்தநல்லூர் கொள்ளிடம் கரையோரப் பகுதிகளில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறு கையில், “காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை காரணமாக நீர்வரத்து அதிகமாக உள்ளதால், கொத்தங்குடி ஊராட்சியில் நீலத்தநல்லூர் பாலம் கொள்ளிடத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, மேட்டூர் அணையிலிருந்து காவிரி, அதன் கிளை ஆறுகள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து ஒரு லட்சத்து 95 ஆயிரம் கனஅடி வரை நீர் திறக்கப்பட்டுள் ளது. திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 2  லட்சம் கனஅடியாக அதிகரிக்க வாய்ப்புள்ள தால், தஞ்சை மாவட்டத்தில் காவிரி மற்றும்  கொள்ளிடக் கரை ஓரங்கள், தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாது காப்பாக இருக்குமாறும், கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என  தெரிவிக்கப்படுகிறது.  மேலும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில்  இயங்கி வரும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை  இலவச அழைப்பு எண்.1077 மற்றும் தொலை  பேசி எண்கள் 04362 - 264114, 04362 - 264115  ஆகியவற்றில் தொடர்பு கொண்டு மழை வெள் ளத்தால் ஏற்படும் சேதம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றார்.

;