கும்பகோணம், நவ.2- தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் கும்ப கோணம் தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஹிபாயத்துல்லா தலைமை தாங்கினார். மமக மாநில துணைப்பொதுச் செயலாளர் தஞ்சை பாதுஷா, மாநில அமைப்பு செய லாளர் ஜெ.ஹமீதுசுல்தான், தலைமை பிரதிநிதி சரவண பாண்டியன் ஆகியோர் பேசினர். மமக மாவட்டச் செயலா ளர் ருசி மைதீன் , தமுமுக மாவட்டச் செயலாளர் அப்துல் ரகுமான், மாவட்டப் பொருளாளர் பொகருதீன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை ‘வழி பாட்டுரிமை பாதுகாப்பு நாளாக’ அறிவிக்க வலியுறுத்தி தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கும்ப கோணம் மாநகரில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்து வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.