districts

img

அய்யம்பேட்டை 9-ஆவது வார்டு திமுக வேட்பாளர் அனுசியா மரணம்

தஞ்சாவூர், பிப்.17- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற வுள்ளது. வியாழக்கிழமையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதனால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.  இந்தநிலையில், தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பேரூ ராட்சியில் 9-ஆவது வார்டு கவுன்சிலர் பத விக்கு, அதே பகுதி நேரு நகரை சேர்ந்த மூர்த்தி மனைவி அனுசியா (56) என்பவர் திமுக சார்பில் போட்டியிட்டார். கடந்த 2 வாரமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் வியாழனன்று மாலை யுடன் பிரச்சாரம் முடிவடைவதால் அனுசியா, காலையிலிருந்தே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். வீடு வீடாக நடந்து சென்று ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரித்தார்.  அப்போது திடீரென அவர் நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த ஆதரவாளர்கள் உடனடியாக அருகில் இருந்த டாக்டர் ஒருவரை வர வழைத்து பரிசோதித்தனர். ஆனால் அனுசியா இறந்துவிட்டதாக டாக்டர் தெரி வித்தார். இதனால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்த னர். இதையடுத்து அனுசியா உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.