தஞ்சாவூர், டிச.16- சம்பா நெல் கொள்முதலின் போது, 50 கிலோ எடையில் நெல் மூட்டையை கொள் முதல் செய்ய வேண்டும் என சம்பா நெல் கொள்முதல் முத்தரப்பு கூட்டத்தில் விவசா யிகள் வலியுறுத்தினர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில், சம்பா நெல் கொள்முதல் தொ டர்பான முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, பள்ளிக்கல்வித்துறை அமைச் சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலா டுதுறை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் பேசுகையில், “வரும் சம்பா பருவத்தில் கொள்முதல் நிலையங் களில், நெல் மூட்டைகள் தேக்கமடை யாமல் உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பா, தாளடி அறுவடையின் போது மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தற்போது தகவல் வெளியிட்டுள்ளது. எனவே 19 சதவீதமாக உள்ள நெல் ஈரப்பதத்தை அதிகரித்து நிரந்தர அரசா ணையை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி பெற்று தர வேண்டும். தமிழகத்தில் வேளாண் வணிகத்துறை மூலம் நெல் 75 கிலோ எடையில் ஒரு நெல் மூட்டை கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும், உரங்கள் உள்ளிட்ட நவதானியங்கள் 50 கிலோவுக்கு மேல் கொள்முதல் செய்யப் படுகிறது. ஆனால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் மட்டும் 40 கிலோ எடையில் நெல் கொள்முதல் செய்யப்படு வது நியாயமில்லை.
காப்பீட்டை பெற்றுத் தர வேண்டும் |
கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பி னருமான பேராசிரியர் முனைவர் எம்.எச்.ஜவா ஹிருல்லா பேசுகையில், “இயற்கைப் பேரிடரால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்காக விவ சாயிகள் கடந்த சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்துள்ளனர். கடந்த ஆண்டு சம்பா பயிர் அறு வடை காலத்தில் பெய்த கனமழை காரணமாக விவ சாயிகள் பெரும் மகசூல் இழப்பை சந்தித்துள் ளனர். பயிர் காப்பீட்டிற்காக சம்பா பருவத்தில் நெற்ப யிர் மற்றும் சிறப்பு பயிர்களுக்காக காப்பீட்டு கட்டண மானியமாக ரூ.1338.89 கோடி தமிழக அரசின் சார்பிலும், ரூ.225 கோடி பீரீமியம் தொகையாக உழ வர்கள் சார்பிலும் என மொத்தம் ரூ.1500 கோடிக்கு மேல் காப்பீட்டு நிறுவனங்கள் வசூலித்துள்ளன. இந்த தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கு குறை வான அளவில் ரூ.481 கோடி மட்டுமே இழப்பீடு வழங்குவதாக காப்பீட்டு நிறுவனங்கள் அறிவித்தி ருப்பது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி யுள்ளது. தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்றழைக் கப்படும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 856 கிராமங் களில் 1, 33,884 விவசாயிகள், 3,50,212 ஏக்கர் பயிர்க ளுக்கு ரூ.17.94 கோடி பிரீமியம் தொகை செலுத்தி காப்பீடு செய்துள்ளனர். இந்நிலையில், இவற்றில் வெறும் 7 கிராமங்களுக்கு மட்டுமே ரூ.35, 42,222 லட்சத்தை, 3322 விவசாயிகளுக்கு மட்டுமே இழப்பீட்டு தொகையாக காப்பீட்டு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் மீதமுள்ள 849 கிராமங் களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ஒரு பைசாகூட கிடைக்காமல் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ள னர். இதில் பாபநாசம் வட்டத்தில் ஒரு கிராமத்திற்கு மட்டுமே இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாப் பேட்டை வட்டாரத்தில் ஒரு கிராமம்கூட இடம் பெற வில்லை. அரசும் உழவர்களும் செலுத்தியுள்ள மானியம் மற்றும் பிரீமியம் தொகையின் அடிப்படையில் பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்றுத் தர நட வடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற தவறு கள் வருங்காலத்தில் நடக்காமல் இருக்க, தமிழக அரசே பயிர்க் காப்பீட்டு நிறுவனத்தை நடத்த வேண்டும். மேலும், தமிழர் திருநாள் பொங்கல் பரிசு வழங்கு வதற்கு கரும்புகளை விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும். திருமண்டங்குடி சர்க்கரை ஆலை விஷயத்தில் அரசு உடனடி தீர்வு காண நடவ டிக்கை எடுக்க வேண்டும்” என்றார். |
இதனால், ஒவ்வொரு 40 கிலோ மூட்டைக்கும் இரண்டு கிலோ கூடுதலாகவும், மூட்டைக்கு ரூ.50 லஞ்ச மாக தர வேண்டி இருப்பதால் விவசாயி களுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படுகிறது. எனவே வரும் சம்பா கொள்முதலில் 50 கிலோ கொண்ட மூட்டையாக கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங் களில் மூட்டைகள் மழையால் பாதிக்கா மல் இருக்க விவசாயிகளுக்கு மானிய விலையில் தார்ப்பாய் வழங்க வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியப்படி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 விலையை அறிவிக்க வேண்டும்” என வலி யுறுத்தினர். மேலும், விவசாயிகள் 50 கிலோ எடை கொண்ட உரச் சாக்குகள், 75 கிலோ எடை கொண்ட சணல் சாக்குகளை அமைச் சர்களிடம் காட்டி தங்களின் கோரிக் கையை முன்வைத்தனர். பின்னர் அமைச்சர் சக்கரபாணி பேசு கையில், “தமிழகத்தில் நெல் கொள்முதல் செய்யப்படும் போது மழையினால் பாதிக்காத வகையில், மேற்கூரையுடன் கூடிய சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடன டியாக அரவைக்கு கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் 750-க்கும் மேற்பட்ட அரவை ஆலைகள் உள்ளன. கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட நெல் அனைத்தும் அரிசியாக அரைக்கப்பட்டு விட்டது. நிகழாண்டில் நெல் கொள்முதல் செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யப் பட்டு, தயார் நிலையில் உள்ளது. கொள் முதல் தொடர்பான புகார்களை விவசாயி கள் அதற்கான கட்டணமில்லா தொலை பேசி எண்ணில் புகார் அளித்ததால் சம்மந்தப்பட்ட பணியாளர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும்” என்றார். அரசு தலைமை கொறடா கோவி.செழி யன், மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம் எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம், சாக் கோட்டை க.அன்பழகன், க.அண்ணா துரை, பூண்டி கலைவாணன், மு.பன்னீர் செல்வம், க.மாரிமுத்து, ஜவாஹிருல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.