தஞ்சாவூர், ஜூலை 19- தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும், மாபெரும் 7 ஆவது புத்தகத் திருவிழா, தஞ்சா வூர் அரண்மனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை துவங்கியது.
மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் தலைமை வகித் தார். தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி துவக்கி வைத்தார். தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், மாநகராட்சி மேயர்கள் சண்.இராம நாதன் (தஞ்சாவூர்), க.சரவணன் (கும்பகோணம்), தஞ்சாவூர் மாநக ராட்சி துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் 7 ஆம் ஆண்டு தஞ்சாவூர் புத்தகத் திருவிழா ஜூலை 19 முதல் 29 வரை 11 நாட்கள் தஞ்சாவூர் அரண்மனை வளா கத்தில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.
இந்த புத்தகத் திருவிழாவில் 110 அரங்கங்களில், 10 ஆயிரம் தலைப்புகளுக்கு மேல் நூல்கள் இடம் பெற்றுள்ளன. 40 அறிவியல் அரங்குகளும், 25 உணவு மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரங்குகள் என மொத்தம் 175 அரங்குகள் அமைக்கப்பட்டு இந்த விழா நடை பெறுகிறது. நாள்தோறும் காலை 10.30 மணிக்கு அறிவியல் அரங்கம், தொடர்ந்து 11.30 மணிக்கு தஞ்சா வூர் மாவட்டத்தைச் சார்ந்த படைப் பாளிகள் பங்கேற்கும் இலக்கிய அரங்கம் நடைபெறும். மாலை 4.30 மணிக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மேலும் மாலை 6 மணிக்கு சிறப் பான கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். நாள்தோறும் மாலை 6.30 மணிக்கு தமிழகத்தின் தலைசிறந்த சொற்பொழிவா ளர்கள் பங்கேற்கும் நகைச்சுவை சிந்தனை அரங்கம் நடைபெறும்.
மேலும் அறிவியல் வாகனம், தொழில்நுட்ப வாகனம், புத்தக வாகனம் போன்ற வாகனத்தில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தக கண்காட்சிகள் பள்ளி-கல்லூரி மாணவர்களை ஊக்குவிப்பதற்காக நடமா டும் வாகனத்தில் அமைக்கப் பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாண வர்களை ஊக்குவிப்பதற்காக நாள்தோறும் பல்வேறு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
பங்கேற்பாளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கப்பட்டு குலுக்கல் முறையில் நாள்தோறும் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டு புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.
தஞ்சாவூர் புத்தகத் திருவிழா விற்கு தேவையான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விரி வாக செய்யப்பட்டுள்ளன.