districts

img

400 பண்ணை குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகளை வழங்கல்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், கடுவெளி, மேலபுனவாசல் பகுதிகளில் உள்ள 400 பண்ணை குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகளை திருவையாறு ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் அரசாபகரன் வழங்கினார். மாவட்டக் குழு உறுப்பினர் வெங்கடசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர் விஜயா, கடுவெளி ஊராட்சி மன்றத் தலைவர் சரிதா, கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் உட்பட கலந்துக் கொண்டனர்.