தஞ்சாவூர், மே.5- செல்போன் சார்ஜ் போட 1 கி.மீ போக வேண்டும், மின்சார வசதி இல்லாததால், வீடு களில் டி.வி இல்லை. ஆன்லைன் வகுப்புகளி லும் மாணவர்கள் பங்கேற்க முடியாத அவலம், இது ஏதேனும் மலைக் கிராமத்தில் நடக்கும் சம்பவம் இல்லை.... தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், மரக்காவலசை பஞ்சா யத்துக்குட்பட்ட கழுமங்குடா மீனவ கிராமம். இது கிழக்கு கடற்கரை சாலையில் இராமேஸ் வரம் செல்லும் வழியில் சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் கடற்கரையை ஒட்டியுள்ளது. இங்குள்ள ஐஸ்வாடி பகுதியில், 20-க்கும் மேற்பட்ட மீனவத் தொழிலாளர்கள் குடும் பத்தினர், கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக, அடிப்படை வசதியின்றி இங்கு வசித்து வரு கின்றனர். இப்பகுதியில், 20 க்கும் மேற்பட்ட பள்ளி முதல் கல்லூரி வரை படிக்கும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட் டோர் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் இங்கு வசிக்கும் மக்கள் இருளில் பாம்பு, பூச்சிக் கடிகளுக்கு நடுவே, குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இந்த இடம் மீன் வளத்துறைக்கு சொந்தமான இடம் எனக் கூறப்படுகிறது. இதனால் மின் இணைப்பு கேட்டு விண் ணப்பித்தால், மீன்வளத்துறை அதிகாரிகள் தடையின்மைச் சான்றிதழ் வழங்கினால் மட்டுமே, மின் இணைப்பு தர முடியும் என மின்சார வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், மீன்வளத்துறை அதிகாரிகள் அவ்வாறு கடிதம் தர மறுப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, பலமுறை இப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் போராட்டம் நடத்தியும், பேராவூரணி வட்டாட்சி யர் த.சுகுமார் தலைமையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை முடிவு எட்டப்படவில்லை எனத் தெரிகிறது. இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த சித்ரா, கண்ணகி, சிபிஎம் கிளைச் செயலாளர் நாகேந்திரன் ஆகியோர் கூறுகையில், “30 ஆண்டுகளுக்கு மேலாக இதே இடத்தில் குழந்தை குட்டிகளுடன் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். ஆனால் மின் வாரிய அதிகாரி கள் எங்களுக்கு மின் இணைப்பு தர மறுத்து விடுகின்றனர். வீட்டு வரி ரசீது செலுத்திய தற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. மின் வசதி இல்லாததால் இப்பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கப்படாமல் உள்ளது. சரியான கழிப்பறை வசதி இல்லை. கிழக்கு கடற்கரை சாலையில் ஆபத்தான பாதையை கடந்து சுமார் 2 கிலோ மீட்டர் சென்று குடிநீர் எடுத்து வருகிறோம். இல்லை என்றால் குடம் பத்து ரூபாய்க்கு மினி வண்டியில் வரும் தண்ணீரை வாங்கித் தான் பயன்படுத்தும் சூழல் உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி வரை படிக்கும் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் இங்கு உள்ளனர். வீட்டில் மின் இணைப்பு இல்லாததால், செல்போன் சார்ஜ் செய்ய இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடைகளில் சென்று காசு கொடுத்து போனுக்கு சார்ஜ் செய்து வருகிறோம். வீட்டில் மின் இணைப்பு இல்லாததால், எங்கள் குழந்தைகள் கொரோனா கால கட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளில் கூட படிக்க முடியாமல், உறவினர் வீடுகளுக்குச் சென்று அங்கிருந்து படித்து வந்தனர்.
தற்போது சிம்னி விளக்கு வெளிச்சத்திலும், கிழக்கு கடற் கரை சாலையில் வீட்டில் இருந்து ஒரு கி.மீ தூரம் சென்று தெருவிளக்கு வெளிச்சத்திலும் படித்து வருகின்றனர். தற்போது அரசு பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், பெண் பிள்ளைகளோடு இரவில் பாதுகாப்புக்காக பெற்றோரும் தெரு விளக்கு அருகே காத்திருக்கும் நிலை உள்ளது. மின்சார வசதி இல்லாததால், இருள் கவிழும் முன்னதாக சமையல் வேலைகளை செய்து முடிக்க வேண்டும். சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டு காலத்தில் மின் வசதி இல்லாமல் மலைக்கிராம ஆதிவாசி மக்கள் போல தவித்து வருகிறோம். எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எங்கள் நிலை கருதி இப்பகுதிக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என மன்றாடி கேட்டுக் கொள்கிறோம்’’ என்றனர். இந்நிலையில், மின்சாரம் கேட்டு மே 10-ஆம் தேதி அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இப்பகுதி பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் குடும்பத்தோடு சாலை மறியல் போராட்டம் நடத்த திட்ட மிட்டுள்ளோம் என்றார் சிபிஎம் கிளைச் செய லாளர் நாகேந்திரன். அனைத்து பகுதிகளுக்கும் சென்று அப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை நிறை வேற்றித் தரும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எங்களின் அவலமான சூழ்நிலையை உணர்ந்து மின்வ சதி ஏற்படுத்தித் தருவார் என்ற நம்பிக்கையில் உள்ளோம்’’ என இப்பகுதி மக்கள் தெரி வித்துள்ளனர். -தஞ்சாவூர் எஸ்.ஜகுபர் அலி