districts

நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 2 பேர் பலி

தஞ்சாவூர், மார்ச் 1 - தஞ்சாவூர் அருகே தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வல்லம் புதூர் பிரிவு சாலையோரம் செவ்வாய்க்கிழமை காலை லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது தஞ்சாவூரிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார் இந்த லாரியின் பின்னால் எதிர்பாராதவிதமாக மோதியது.  இதில் காரை ஓட்டிச் சென்ற வடக்குவாசல் ஜெபமாலை  புரத்தை சேர்ந்த விஜய் (35), பயணம் செய்த டி.சி.டபிள்யூ.எஸ். காலனி பிருந்தாவனத்தைச் சேர்ந்த ஜெயராமன்  (22) பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர்.  இதுகுறித்து வல்லம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.