districts

img

வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும்

தஞ்சாவூர்/மயிலாடுதுறை/திருவாரூர், டிச.11 -  வாடகை மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்யக் கோரி, வணிகர் சங்கங்க ளின் பேரமைப்பினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கடை வாடகை மற்றும்  கட்டடங்களுக்கு ஒன்றிய அரசு விதித் துள்ள 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும்.

வணிகக் கட்டடங்களுக்கு ஏற்கெ னவே 100 சதவீதம் வரி உயர்த்தப் பட்டுள்ள நிலையில், ஆண்டுதோ றும் 6 சதவீத சொத்து வரி விதிக்கும்  உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்.  வணிக உரிமை கட்டணம் மற்றும் தொழில் வரிகளின் உயர் வைத் திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாடு வணிகர்கள் மீது ஒன்றிய அரசு திணிக்கிற நியாயமற்ற ஜிஎஸ்டி வரி விதிப்பைக் கைவிட வேண்டும். வணிகர்களிடம் சோ தனை என்ற பெயரில் வருவாய்த் துறை, உணவுத் துறை, தொழிலா ளர் நலத் துறை அலுவலர்களின் அநியாய அபராத கட்டண வசூலை தடுத்து நிறுத்த வேண்டும்.

மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சி நிர்வா கங்களில் குப்பை வரியை மாநிலம்  முழுவதும் சீராக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப் பட்டன.

தஞ்சாவூர் தலைமை அஞ்ச லகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்துக்கு மாவட்டத் தலைவர் ஆர்.சூரியகுமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஏ.வி.எம்.ஆனந்த், மாவட்டப் பொருளாளர் ஆர்.பாஸ்கர், துணைத் தலை வர்கள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மயிலாடுதுறை நகரில் 3 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. தொடர்ந்து விஜயா தியேட்டர் சாலையில், மயி லாடுதுறை, குத்தாலம், தரங்கம் பாடி, சீர்காழி பகுதியைச் சேர்ந்த வணிகர்கள் கோரிக்கைகளை வலி யுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.

 தொடர்ந்து நான்கு சக்கர வாக னங்களில் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து   சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் மதிய ழகன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு வனிகர் சங்க பேரமைப்பு மாவட்டத் தலை வர் தமிழரசன் தலைமையில் நிர்வாகி கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். திருவாரூர் கொட்டும் மழையில் திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின்  மாவட்டத் தலைவர் வி.கே.கே. ராமமூர்த்தி தலைமை வகித்தார். தஞ்சை மண்டல தலைவர் எல்.செந்தில்நாதன், மாநில துணைத் தலைவர் சு.ஞானசேகரன், திருவா ரூர் மாவட்டச் செயலாளர் எம்.ஆதப்பன், பொருளாளர் எஸ்.எம்.டி.  கருணாநிதி உள்ளிட்டோர் முன்னிலை  வகித்தனர்.